சிறு வினா
1)இருவகை அசைகளையும் விளக்குக.
நேரசை
- குறில்
- குறில் ஒற்று
- நெடில்
- நெடில் ஒற்று என்றும்
நிரையசை
- குறில் குறில்
- குறில் குறில் ஒற்று
- குறில் நெடில்
- குறில் நெடில் ஒற்று என்றும் வரும்.
2) தளை என்பது யாது?
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
3) அந்தாதி என்றால் என்ன?
- ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடுவது அந்தாதி ஆகும்.
4) பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பா நான்கு வகைப்படும். அவை,
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக