சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) வானில் முழுநிலவு அழகாகத்________ அளித்தது
- தயவு
- தரிசனம்
- துணிவு
- தயக்கம்
2) இந்த _________முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு
- வையம்
- வானம்
- ஆழி
- கானகம்
3) ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
- சீவ+நில்லாமல்
- சீவன்+ நில்லாமல்
- சீவன் +இல்லாமல்
- சீவ+ இல்லாமல்
4) 'விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- விலம்+கொடித்து
- விலம்+ ஒடித்து
- விலன்+ ஒடித்து
- விலங்கு +ஒடித்து
5) காட்டை+ எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________
- காட்டைஎரித்து
- காட்டையெரித்து
- காடுஎரித்து
- காடுயெரித்து
6) இதம் +தரும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- இதந்தரும்
- இதம்தரும்
- இதத்தரும்
- இதைத்தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக