சனி, 16 ஏப்ரல், 2022

திருக்குறள் இயல் 8 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  1. ஆண்மையின் கூர்மை___________
    1. வறியவருக்கு உதவுதல்
    2. பகைவருக்கு உதவுதல்
    3. நண்பனுக்கு உதவுதல்
    4. உறவினருக்கு உதவுதல்
  2. வறுமை வந்த காலத்தில்_________ குறையாமல் வாழ வேண்டும்
    1. இன்பம்
    2. தூக்கம்
    3. ஊக்கம்
    4. ஏக்கம்
  3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
    1. பெரிய +செல்வம்
    2. பெருஞ்+செல்வம்
    3. பெரு +செல்வம்
    4. பெருமை +செல்வம்
  4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப்பிரித்து எழுதக் கிடைப்பது __________
    1. ஊர்+ ஆண்மை
    2. ஊராண்+ மை
    3. ஊ+ஆண்மை
    4. ஊரு+ஆண்மை
  5. திரிந்து+அற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________
    1. திரிந்ததுஅற்று
    2. திரிந்தற்று
    3. திரிந்துற்று
    4. திரிவுற்று

பொருத்துக

  1. இன்பம் தருவது – பண்பு உடையவர் நட்பு
  2. நட்பு என்பது –சிரித்து மகிழ மட்டும் அன்று
  3. பெருமையை அழிப்பது –குன்றிமணி அளவு தவறு
  4. பணிவு கொள்ளும் காலம் –செல்வம் மிகுந்த காலம்
  5. பயனின்றி அழிவது –நற் பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக