சனி, 16 ஏப்ரல், 2022

திருக்குறள் குறுவினா இயல் 8

 குறுவினா


1)எது பெருமையைத் தரும்?

  • காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.


2) நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?

  • நமக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு.
  • அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.


3) இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

  • பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால் தான் உலகம் இயங்குகிறது.


4) நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

  • நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று.
  • நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.


படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக




கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக