சனி, 16 ஏப்ரல், 2022

கொங்குநாட்டு வணிகம் இயல் 6 ஒருமதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1) ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல்________

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

2) சேரர்களின் தலைநகரம் __________

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தொண்டி
  4. முசிறி

3) பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _________

  1. புல்
  2. நெல்
  3. உப்பு
  4. மிளகு

4) ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ________

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

5)வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ________

  1. நீலகிரி
  2. கரூர்
  3. கோயம்புத்தூர்
  4. திண்டுக்கல்

கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்___________ (சேலம்)
  2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் __________(திண்டுக்கல்)
  3. சேரர்களின் நாடு _________ எனப்பட்டது (குட நாடு)
  4. பின்னலாடை நகரமாக_________ விளங்குகிறது.(திருப்பூர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக