சனி, 16 ஏப்ரல், 2022

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் இயல் 5 சிறு வினா

 சிறு வினா



1. பிரம்பினால் பொருட்கள் செய்யும் முறையைக் கூறு.

a. முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்

b. சூடான பிறகு நட்டு வைத்திருக்கும் இருகடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும்

c. அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல வளையும்

d. பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும்.

e. பின்னர் அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும் சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருட்களாக மாற்றலாம்.



2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

a. மட்டக்கூடை

b. தட்டுக்கூடை

c. கொட்டுக் கூடை

d. முறம்

e. ஏணி

f. சதுரத்தட்டி

g. கூரைத்தட்டி

h. தெரு கூட்டும் துடைப்பம்

i. மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி

j. பழக்கூடை

k. பூக்கூடை

l. பூத்தட்டு

m. புல்லாங்குழலாய்

n. கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக