சனி, 16 ஏப்ரல், 2022

நாட்டுப்புற கைவினை கலைகள் இயல் 5 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை_________

a. கல்வெட்டுகள்

b. செப்பேடுகள்

c. பனையோலைகள்

d. மட்பாண்டங்கள்


2. பானை__________ஒரு சிறந்த கலையாகும்

a. செய்தல்

b. வனைதல்

c. முடைதல்

d. சுடுதல்


3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

a. மட்டு+மல்ல

b. மட்டம்+அல்ல

c. மட்டு+அல்ல

d. மட்டும்+அல்ல


4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

a. கயிற்றுக்கட்டில்

b. கயிர்க்கட்டில்

c. கயிறுக்கட்டில்

d. கயிற்றுகட்டில்


பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. முழுவதும்-நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும்

2. மட்டுமல்லாமல்-அமைதி மட்டுமல்லாது மகிழ்ச்சி நீடிக்க வேண்டும்

3. அழகுக்காக-அழகுக்காக பூச்செடிகளை வளர்க்கலாம்

4. முன்பெல்லாம்-முன்பெல்லாம் நேர்மைக்கு மதிப்பு அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக